Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எருமப்பட்டி: எருமப்பட்டி பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர்களுக்கான ஆய்வு கூட்டம் பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் எங்கெங்கு சாலை போட வேண்டும் என்பது குறித்தும், தெரு விளக்குகள் அதிகப்படியாக எங்கே போட வேண்டிய இடங்களை பற்றியும் மற்றும் மழைக்காலம் வருவதை ஒட்டி டெங்கு மலேரியா போன்றவை வராமல் தடுக்கும் பொருட்டு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் ரவி, இளநிலை உதவியாளர் சுரேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.